பாங்கு & இகாமத்


பாங்கு & இகாமத் 



அளவற்ற அருளாளனும் கருணையன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ.

கடமையான தொழுகைக்கு பாங்கும் இகாமத்தும் சொல்ல வேண்டும். 
பாங்கு(அதான்) என்பது தொழுகைக்கு மக்களை அழைப்பதற்காக உள்ள குறிப்பிட்ட வாசகங்களாகும் . 
இகாமத் என்பது கடமையான தொழுகை துவங்குவதற்கு முன் கூறப்படும் குறிப்பிட்ட வாசகங்களாகும் .



ஸஹீஹ் புகாரி : 631

கடமையான தொழுகைக்கு பாங்கும் , இகாமத்தும் சொல்ல வேண்டும் . ' தொழுகை நேரம் வந்து விட்டால் உங்களில் ஒருவர் பாங்கு சொல்லட்டும் . உங்களில் பெரியவர் தொழ வைக்கட்டும் ' என்று நபி ( ஸல் ) கூறினார்கள் . அறிவிப்பவர் : மாலிக் பின் ஹுவைரிஸ் ( ரலி )


பாங்கு (அதான்)  வாசகங்கள் :

அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர்
 அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர்
 அஷ்ஹது அல்லாஇலாஹ இல்லல்லாஹ் அஷ்ஹது அல்லாஇலாஹ இல்லல்லாஹ் 
அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ்
அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ்
ஹய்ய அலஸ்ஸலாஹ் 
ஹய்ய அலஸ்ஸலாஹ் 
ஹய்ய அலல் பலாஹ் 
ஹய்ய அலல் பலாஹ் 
அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் லாஇலாஹ இல்லல்லாஹ் 


பொருள் :

 அல்லாஹ் மிகப் பெரியவன் . 
அல்லாஹ் மிகப் பெரியவன் . 
அல்லாஹ் மிகப் பெரியவன் . 
அல்லாஹ் மிகப் பெரியவன் . வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்று நான் சாட்சி பகர்கிறேன்.
வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்று நான் சாட்சி பகர்கிறேன் .
 முஹம்மது நபி ( ஸல் ) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் நான் சாட்சி பகர்கிறேன் .
 முஹம்மது நபி ( ஸல் ) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் நான் சாட்சி பகர்கிறேன் .
 தொழுகையின் பால் வாருங்கள் . 
தொழுகையின் பால் வாருங்கள் . 
வெற்றியின் பால் வாருங்கள் .
 வெற்றியின் பால் வாருங்கள் , 
அல்லாஹ் மிகப் பெரியவன் .
 அல்லாஹ் மிகப் பெரியவன் . வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை .

 ஃபஜ்ருடைய நேரத்தில் சொல்லப்படும் பாங்கில் ஹய்ய அலல் பலாஹ் . ஹய்ய அலல் பலாஹ் என்று இருமுறை கூறியபின் 
 அஸ்ஸலாத்து கைறும் மினன்னவ்ம் " என்று இருமுறை கூற வேண்டும் . 
பொருள் : " தூக்கத்தை விட தொழுகை மேலானது .


பாங்கின் அழைப்பிற்கு பதில் கூறுதல் 

ஸஹீஹ் முஸ்லிம் : 629

அல்லாஹ்வின் தூதர் ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தொழுகை அறிவிப்பாளர் 
அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர் 
என்று சொன்னால் நீங்களும் 
அல்லாஹு அக்பர்,அல்லாஹு அக்பர் 
என்று சொல்லுங்கள்.
 பின்பு அவர், 
அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹ் 
என்று சொன்னால் நீங்களும் 
அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹ் 
என்று சொல்லுங்கள். 
பின்பு அவர், 
அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ் 
என்று சொன்னால் நீங்களும் 
அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ் 
என்று சொல்லுங்கள். 
பின்பு அவர்
 ஹய்ய அலஸ் ஸலாஹ்
 என்று சொன்னால் நீங்கள்
 லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்
(அல்லாஹ்வின் உதவியில்லாமல் (பாவங்களிலிருந்து) விலகிச்செல்லவோ (நல்லறங்கள் புரிய) ஆற்றல் பெறவோ மனிதனால் முடியாது) என்று சொல்லுங்கள்.
 பின்பு அவர்
 ஹய்ய அலல் ஃபலாஹ் 
என்று சொன்னால் நீங்கள், 
லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ் 
என்று சொல்லுங்கள். 
பின்பு அவர் 
அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர்
என்று சொன்னால் நீங்களும்
 அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர் 
என்று சொல்லுங்கள். 
பின்பு அவர்
 லா இலாஹ இல்லல்லாஹ் 
என்று சொன்னால் நீங்களும்
 லா இலாஹ இல்லல்லாஹ் 
என்று மனப்பூர்வமாகச் சொல்லுங்கள். உங்களில் இவ்வாறு கூறுபவர் சொர்க்கத்தில் நுழைந்துவிட்டார்.
இதை உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.



ஸலவாத்து கூறுதல் :

ஸஹீஹ் முஸ்லிம் : 628

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தொழுகை அறிவிப்பாளரின் அறிவிப்பை நீங்கள் செவியுற்றால் அவர் கூறுவதைப் போன்றே நீங்களும் கூறுங்கள். பின்பு என்மீது ஸலவாத் சொல்லுங்கள். ஏனெனில், என்மீது யார் ஒருமுறை ஸலவாத் சொல்கிறாரோ அதன் காரணத்தால் அவருக்குப் பத்து முறை அல்லாஹ் அருள்புரிகின்றான். பின்பு எனக்காக அல்லாஹ்விடம் வஸீலாவைக் கேளுங்கள். வஸீலா என்பது சொர்க்கத்திலுள்ள (உயர்) பதவியாகும்; அல்லாஹ்வின் அடியார்களில் ஒருவருக்குத்தான் அது கிடைக்கும். அந்த ஒருவர் நானாகவே இருக்க விரும்புகிறேன். எனவே, எனக்காக அந்தப் பதவியை (அல்லாஹ்விடம்) கேட்பவருக்கு (மறுமை நாளில்) எனது பரிந்துரை அவசியம் கிடைக்கும்.
இதை அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


ஸலவாத்தின் வாசகங்கள் :


அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லை( த் )த அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்ராஹீம இன்ன( க் )க 
ஹமீது( ன் )ம் மஜீத் . அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்ராஹீம இன்ன( க் )க ஹமீது( ன் )ம் மஜீத் . 



பொருள் : 

ஸஹீஹ் புகாரி : 3370

 இறைவா ! இப்ராஹீம் ( அலை ) அவர்கள் மீதும் , இப்ராஹீம் ( அலை ) அவர்களின் குடும்பத்தார் மீதும் நீ அருள் புரிந்ததைப் போல் முஹம்மது ( ஸல் ) அவர்கள் மீதும் , முஹம்மது ( ஸல் ) அவர்களின் குடும்பத்தார் மீதும் நீ அருள் புரிவாயாக ! நீ புகழுக்குரியவனாகவும் , கண்ணியத்திற்குரியவனாகவும் இருக்கிறாய் . இறைவா ! இப்ராஹீம் 
( அலை ) அவர்களுக்கும் , இப்ராஹீம்
 ( அலை ) அவர்களின் குடும்பத்தாருக்கும் நீ விருத்தி ( பரகத் ) செய்தது போல் முஹம்மத் ( ஸல் ) அவர்களுக்கும் , முஹம்மத் ( ஸல் ) அவர்களின் குடும்பத்தாருக்கும் விருத்தி ( பரகத் ) செய்வாயாக ! நீ புகழுக்குரியவனாகவும் , கண்ணியத்திற்குரியவனாகவும் இருக்கிறாய் ' 
அறிவிப்பவர் : கஅப் பின் உஜ்ரா ( ரலி )



ஸலவாத்திற்கு பின் துஆ :


அல்லாஹும்ம ரப்ப ஹாதிஹித் தஃவ(த்)தித் தாம்ம(த்)தி வஸ்ஸலா(த்)தில் காயிம(த்)தி ஆ(த்)தி முஹம்மதன் அல்வஸீல(த்)த வல் ஃபளீல(த்)த வப்அஸ்ஹு மகாமன் மஹ்மூதன் அல்லதீ வஅத்தஹு


பொருள் :

ஸஹீஹ் புகாரி : 614

 முழுமையான இந்த அழைப்புக்குரிய இறைவனே ! நிலையான தொழுகைக்குரியவனே ! முஹம்மது ( ஸல் ) அவர்களுக்கு வஸீலா எனும் பதவியையும் , சிறப்பையும் வழங்குவாயாக ! அவர்களுக்கு நீ வாக்களித்த புகழுக்குரிய இடத்தில் அவர்களை எழுப்புவாயாக ! என்று யார் பாங்கோசை கேட்கும் போது கூறுவாரோ அவருக்கு மறுமையில் நாளில் என்னுடைய பரிந்துரை அவசியம் கிடைக்கும் என்று நபி ( ஸல் ) அவர்கள் கூறினார்கள் . 
அறிவிப்பவர் : ஜாபிர் ( ரலி )

மேற்கூறப்பட்ட துஆவையோ , அல்லது பின்வரும் துஆவையோ ஓதிக் கொள்ளலாம் . 

அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு 
லஷரீ( க் ) கலஹு வஅன்ன முஹம்மதன் அப்துஹு வரஸுலுஹு . ரளீத்து பில்லாஹி ரப்பன் வபி முஹம்மதி ( ன் ) ர் ரஸுலன் வபில் இஸ்லாமி தீனா 



பொருள் : 

ஸஹீஹ் முஸ்லிம் : 631

அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை . அவன் தனித்தவன் . அவனுக்கு இணையேதுமில்லை . முஹம்மத் ( ஸல் ) அவர்கள் அவனுடைய அடியாரும் தூதருமாவார்கள் . அல்லாஹ்வை அதிபதியாகவும் , முஹம்மதை ( இறைத் தூதராகவும் , இஸ்லாத்தை மார்க்கமாகவும் ஏற்றுக் கொண்டேன் . என்று யார் பாங்கோசை கேட்கும் போது கூறுவாரோ அவரின் பாவங்கள் மன்னிக்கப்படும் என்று நபி
 ( ஸல் ) அவர்கள் கூறினார்கள் . அறிவிப்பவர் : ஸஅத் பின் அபீ வக்காஸ் ( ரலி )  




இகாமத் 

ஸஹீஹ் முஸ்லிம் : 569

 கடமையான தொழுகையை நிறைவேற்றும் முன்பு இகாமத் சொல்லி தொழுகையைத் துவங்க வேண்டும் . இகாமத் என்பது பாங்கைப் போன்றது தான் . எனினும் அதில் சில மாற்றங்கள் உள்ளன . பாங்கின் வாசகங்களை இரட்டையாகவும் கத்காமதிஸ்ஸலாஹ் என்பதைத் தவிர மற்ற வாசகங்களை ஒற்றையாகவும் சொல்லுமாறு பிலால் ( ரலி ) அவர்கள் கட்டளையிடப்பட்டார்கள் . அறிவிப்பவர் : அனஸ் ( ரலி ) 



இகாமத் வாசகங்கள் :

அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் 
அஷ்ஹது அல்லாஇலாஹ இல்லல்லாஹ் 
அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லல்லாஹ்
 ஹய்ய அலஸ்ஸலாஹ் ஹய்ய அலல் பலாஹ்
 கத் காமதிஸ் ஸலாஹ்
 கத் காமதிஸ் ஸலாஹ் 
அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் 
லாஇலாஹ இல்லல்லாஹ் 



பொருள் :

 அல்லாஹ் மிகப் பெரியவன் . 
அல்லாஹ் மிகப் பெரியவன் . வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்று நான் சாட்சி பகர்கிறேன் 
முஹம்மது நபி ( ஸல் ) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் நான் சாட்சி பகர்கிறேன் . 
தொழுகையின் பால் வாருங்கள் . 
வெற்றியின் பால் வாருங்கள் . 
தொழுகை ஆரம்பமாகிவிட்டது . 
தொழுகை ஆரம்பமாகிவிட்டது . 
அல்லாஹ் மிகப் பெரியவன் , 
அல்லாஹ் மிகப் பெரியவன் . வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை .



அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ. 







Comments

Post a Comment